Monday, August 16, 2010

நான் ஏன் இங்கு எழுத வந்தேன்?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான் கண்டதில் / கேட்டதில் / படித்ததில் “நான் கண்ட மெய்ப்பொருளை” மக்களுக்கு எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற அவாவினால் இவைகளை எழுத தொடங்கினேன்.
முழுக்க முழுக்க பிற மொழி கலப்பில்லாமல்,தமிழை மட்டுமே பயன்படுத்த இயன்ற அளவு முயற்சி எடுத்துள்ளேன். ஒரு சில வார்த்தைகள் என்னை மீறி பிற மொழிகளில் வந்திருந்தால் என்னை மன்னித்து, அந்த வார்த்தைகளுக்கு ஈடான தமிழ்கூறு என்ன என்று எனக்கு தெரியப்படுத்தினால் நானும் தெரிந்துகொண்டு திருத்திக்கொள்வேன். அப்படி ஒரு ஈடான தமிழ்கூறு இல்லாத பட்சத்தில், நாமே கலந்து ஆலோசித்து புதிய கூறு ஒன்றை உருவாக்கி அதனை அனைவரும் பயன்படுத்த வழிவகை செய்யலாம்.
என் பதிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் எனது உள்மன குமுறல்களின் வெளிப்பாடு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
கேள்விகள், பாராட்டுக்கள் மற்றும் குற்றங்களை தெரிவிக்க வேண்டிய முகவரி “mokkachaami@gmail.com”. தவறுகள் உடனே திருத்திக்கொள்ளப்படும்.
வாழ்ந்தோம் மடிந்தோம் என்று இல்லாமல் என் எண்ணங்களை மக்கள் அரங்கத்தில் கொண்டு சென்று என்னால் முடிந்ததை மக்களுக்கு கொண்டு சேர்க்க தூண்டிய, என்னை பாதித்த பாரதியின் பாடல் வரிகள்…
 
"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"
 
என்றும் நன்றியுடன்….
ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

1 comment:

Gayu said...

kalakreenga Rajesh!

Post a Comment