Monday, August 16, 2010

சினிமா விமர்சனம் - காதல் சொல்ல வந்தேன்...


கதை
நமது கதாநாயகன் "நானு பிரபு" (Balaji) வேதியியல் முதலாம் ஆண்டு மாணவன். அவன் படிக்கும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியான "சந்தியா"வை (Meghna) பார்த்த முதற்கொண்டே காதலிக்கிறார். அவனின் குணங்களை கண்டு சந்தியாவிற்கும் அவனை பிடிக்கிறது. இருவரும் பழகத் தொடங்குகிறார்கள். அவன் தன் காதலை அவளிடம் சொல்லும் முன்னரே, அவள், அவனிடம் ஒரு சகோதர நேசத்துடன் மட்டும் தான் பழகுவதாக சொல்லிவிடுகிறாள். அவன் அதை எற்றுக்கொண்டானா? இருவரும் இணைந்தார்களா? என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்துகொள்க....

நன்று
  1. நம்  கதாநாயகனான பாலாஜி. நன்றாக நடிக்க வருகிறது இவருக்கு. தமிழ் திரைப்பட உலகிற்கு இன்னுமொரு திறமையான வரவு.
  2. கதாநாயகி - சரியான தேர்வு. பக்கத்து வீட்டு அக்க போல் இருக்கிறார். மற்ற கதாநாயகிகளைப்போல் சும்மா வந்து செல்லாமல், தனது நடிப்பால் கதையின் உயிரோட்டத்திற்கு நன்றாக உதவுகிறார்.
  3. யுவனின் இசை - நம்மை தாலாட்டுகிறது. அனைத்து பாடல்களும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
  4. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - நன்றாக இருக்கிறது. 
  5. கதாநாயகனின் தோழனாக வரும் அந்த பொடியனுக்கு (Sabesh Bobby) நன்றாக காமெடி வருகிறது. பல இடங்களில் நம்ம சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் நம்மை தமது நடிப்பால் அழவும் வைக்கிறார்.
  6. ஒளிப்பதிவு (Rana) - அருமை. திருச்சி, இவர் காமிரா வழியே மிகவும் அழகாகத் தெரிகிறது. 
நன்றல்லது
  1. நமது கதாநாயகன, முகபாவங்களிலும், நடிப்பிர்க்கேற்ற உடலசைவிலும் இன்னும் மெருகேற வேண்டும்.
  2. திணிக்கப்பட்ட  பாடல் (சாமி வருகுது). முழுவதும் ஒரு சொல்லவொண்ணா செயற்கைத்தனம்.
  3. எடிட்டிங் - முகவும் சொதப்பி இருக்கிறார்கள். பல இடங்களில் கட்சிகள் முடிந்தவுடன் அவற்றை வெட்டாமல் சில வினாடிகள் நீண்டு இருப்பது எரிச்சலை தருகிறது.
  4. நீளமான பின்பாதி.
  5. முன்னர் வந்த திரைப்படங்களை நினைவூட்டும் சில காட்சிகள்.
  6. சில இடங்களில் ஏன் என்றே தெரியாமல் காட்சிகளை வைத்து இருப்பது. உதாரணமாக அந்த லாட்ஜ் காட்சி. கதாநாயகனுக்கு புத்தி வருவதற்கு இப்படியெல்லாமா செய்வது?. சினிமாத்தனம்..
  7. கடைசிக்  காட்சியில் சினிமாத்தனம் சற்றே தூக்கலாக இருப்பதால் அதனால் நம் மனதில் எந்த விதமான உணர்ச்சியும் ஏற்படவில்லை.
தீர்ப்பு:

நாம் தினமும் பார்க்கும் சக மனிதர்களைப் போல் கதாபாத்திரங்கள், புதுமுகங்களின் நடிப்பு, யாரையும் புண்படுத்தாமல் வயிற்றை மட்டும் புண்படுத்தும் காமெடி காட்சிகள், சண்டை காட்சிகளையும் கவர்ச்சியையும் நம் இயக்குனர் நம்பாது கதையை மட்டுமே நம்பியது, இந்த படத்திற்கு நல்லதொரு பெயரை பெற்று தருகிறது. 

இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஒரு உந்துதல் தருவதற்காகவும், நல்ல கதையமைப்பிற்காகவும் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம்.


No comments:

Post a Comment