Tuesday, October 5, 2010

தூசி தட்டி எடுக்கப்பட்ட காமராஜர் பெயர்

செய்தி  : 
காமராஜர் நினைவு நாளில், அதிமுகவினர் காமராஜரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 


இந்த வருடம் திடீரென அதிமுக விற்கு எப்படி காமராஜர் நினைவில் வந்தார் என்பதற்கு  ஒரு கற்பனை உரையாடல்...

-------------
இடம் : கொடநாடு
நாள் : அக்டோபர் 1, 2010

ட்ரிங்.....ட்ரிங்......

காரியதரிசி : ஹலோ,யாரு பேசுறது?

மறுமுனை : நாங்க தலைமை கழகத்திலிருந்து பேசுறோம். அம்மா இருக்காங்களா?

காரியதரிசி : இருக்காங்க. இருங்க கொடுக்கிறேன்.

அம்மா : சொல்லுங்க. என்ன விஷயம்?

மறுமுனை : திமுக, காங்கிரஸ் எல்லோரும் எதேதுக்கோ கூட்டம் கூட்டமா போய் மக்கள் பார்க்கிற மாதிரி ஏதாவது செஞ்சிகிட்டே இருக்காங்க  அம்மா. நாங்க என்ன செய்யுறதுன்னு தெரியல. ஏதாவது சொல்லுங்கம்மா. நாம ஏதாவது செய்யலேன்னா மக்கள் நம்மள மறந்திடுவாங்க.

அம்மா : அமாம், நான் கூட அத பத்திதான் யோசிச்சிகிட்டே இருந்தேன். ஒரு நிமிஷம் இருங்க....ம்ம்ம்.... இப்போ யாருடையதாவது பிறந்த நாளாவது வருதா பாருங்க.

மறுமுனை : ஆமாம்மா. நாளைக்கு தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாள் வருது. நாம ஏதாவது செஞ்சு கூட்டத்தை கூட்டலாமா அம்மா?

அம்மா : வேணாம். அவரின் பிறந்த நாளை கொண்டாடினால் நமக்கு என்ன லாபம்? அவரை மக்கள் இப்போ நினைக்கிறது வருஷத்துல ரெண்டே நாள் தான். அவரை விட்டுடுங்க. அதெல்லாம் சரிப்படாது. வேற ஏதாவது செய்யலாம்...

மறுமுனை : எங்களுக்கும் எதுவும் தோணலை அம்மா.

அம்மா : இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை?

மறுமுனை : என்னம்மா பண்றது. இத்தனை வருஷமா, நீங்க இல்லன்னா சின்னம்மா மட்டும்தான் யோசிச்சீங்க. அதனால சட்டுன்னு மூளை வேலை செய்ய மாட்டேங்குதும்மா. மன்னிச்சிருங்க.
 
அம்மா : சரி. ஒரு நிமிஷம் இருங்க....
(காரியதரிசியை அழைத்து எதோ கேட்கிறார். பின்னர் தொலைபேசியில்.....)

காமராஜரோட நினைவு நாள் நாளைக்கு. அவரோட சமாதிக்கு கூட்டமா போய் மலர் வளையம் வச்சிட்டு வாங்க.

மறுமுனை : யாரும்மா அந்த காமராஜர்?

அம்மா : இந்த காங்கிரஸ்காரங்க சொல்லிக்கிட்டே இருப்பாங்களே, காமராஜர் ஆட்சி!! காமராஜர் ஆட்சின்னு, அதுல வர்றவர் தான். 

மறுமுனை : அவர் அப்படி என்னம்மா செய்தார்? ஒன்னும் தெரியலையே?

அம்மா : அதை பத்தியெல்லாம் நாம  கவலைப்பட வேண்டாம். அவரு என்ன செஞ்சார் எப்படி வாழ்ந்தார் என்பதை பத்தி காங்கிரஸ்காரங்களே கவலைப்படுறதில்லே. நாம எதுக்கு யோசிக்கணும். அவர் வகிச்ச முதலமைச்சர் பதவி மட்டும்  நமக்கு போதும். அவரோட கொள்கைகள் எல்லாம்  நாம நடத்துற அரசியலுக்கு சரிப்பட்டு  வராது. விட்டுடுங்க.

மறுமுனை : கடந்த 35 வருஷமா நாம அப்படி செஞ்சதில்லையே அம்மா. நாம ஆட்சியில இருந்தப்ப கூட அமைச்சர்கள் தான் அவரின் விழாவுக்கு போனாங்க. நீங்க எதுக்கும் போகலியே அம்மா. மக்கள் கோவிச்சிக்க மாட்டாங்களா அம்மா?

அம்மா : (பலத்த சிரிப்பொலி) மக்களை பத்தியெல்லாம் நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க. மக்களுக்கு அந்த அளவுக்கு ஞாபகசக்தி இருந்திருந்தா நாம யாரும் தேர்தல்ல ஜெயிச்சிருக்கவே முடியாது. தேர்தல்ல ஜெயிக்க அவருடைய பேரை நாம உபயோகப்படுத்தியாக வேண்டும். புரியுதா?

மறுமுனை : புரியுதும்மா. ஆனா அது நமக்கு எப்படி சாதகமாகும்ன்னு தான் புரியல.

அம்மா : சொல்றத நல்ல கவனமா கேளுங்க. அதிமுக கோட்டையா இருந்த தென் மாவட்டங்கள்ள, போன தடவை நடந்த நாடாளுமன்ற தேர்தல்ல நாம ஒரு தொகுதியில கூட ஜெயிக்கல. ஏன்னு சர்வே எடுத்து பாத்தப்ப, நம்ம கட்சி தேவர் கட்சிங்கிற முத்திரை இருக்கு. நாடார்களும் தலித்துகளும் அதிகமா உள்ள தொகுதி அது. 

மறுமுனை  : நாடார்களுக்கு நாம என்னம்மா பண்ணோம்?

அம்மா : வெங்கடேச பண்ணையார நாம தானே வீடு புகுந்து போட்டு தள்ளினோம். அத கருணாநிதி நல்ல பயன்படுத்தி பண்ணையாரின்  மனைவிக்கு (ராதிகா செல்வி)  எம்.பி பதவியை  கொடுத்து அமைச்சராக்கி நாடார் ஒட்டு எல்லாத்தையும் தன் பக்கம் இழுத்துக்கிட்டாரு.

ஆனா இப்போ, சட்டம் ஒழுங்கு பிரச்னையில வியாபாரிங்க எல்லோரும் ஆளுங்கட்சி மேல ரொம்ப அதிருப்தியா இருக்காங்க. இந்த சமயத்தில் நாடாரான காமராஜரின் பேரை உபயோகப்படுத்தினோம்னு வைங்க, நல்லா கல்லா கட்டலாம். புரியுதா?

மறுமுனை : நல்லா புரியுது அம்மா. நீங்க சொன்னபடியே செஞ்சிடுறோம். 

அம்மா : ஒரு வேகத்துல போய் யாருக்கும் பேட்டி குடுத்துராதீங்க. காமராஜரை பத்தி கேட்டாங்கன்ன மாட்டிக்குவீங்க. புரியுதா?

மறுமுனை : சரிம்மா. நீங்க சொன்ன மாதிரியே செய்யுறோம். 
(கோஷம் : அம்மா வாழ்க!!!!)

2 comments:

Anonymous said...

இன்றைய டாப் பிரபல வலைப்பதிவுகள் www.sinhacity.com இல்

Rajesh Krishnamoorthy said...

பிரபலமான தமிழ் பதிவுகளில் நான்காவதாக இந்த பதிவு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. வாசகர்களுக்கு நன்றி.

Post a Comment